Friday, October 31, 2014

அந்த அக்டோபர் முப்பது 1990 முதல் இன்றுவரை ! (மறந்த சுவடுகளை மீட்டிப்பார்க்கும் ஒரு முஸ்லீம் அகதி !)

    
       ஒரு அராஜஹத்தின் அசிங்கத் தீர்ப்பு ! மனிதம் மீறிய அடாவடி இறுமாப்பு !விடுதலைப் புலிகள் வடக்கில் வைத்த ஆப்பு ! அது முஸ்லீம் 
உம்மத்தின் வாழ்விட உரிமை பறிப்பு !அந்த அக்டோபர் முப்பது 1990 !

   தம்பியின் (பிரபாகரன் ) இயக்கம் 'தம்பிலா' என எம்மை வாஞ்சையோடு விளிப்பவர்களை அணைக்கச் சொன்னதா !?அநாதை தனத்தை உணர்த்தி உலகளாவிய உம்மத்தின் நிஜத்தோடு சேர்த்துப் பார்த்ததா!? 


                                                   கேட்கப் பார்க்க ஆள் இல்லாததால் போட்டுத் தகர்க்கும் ஆணவ அரசியலின் பகடைக் காய் ஆனோம் !சாம்ராஜ்யம் தாங்கிய சந்ததி நாம் பொறுக்கிப் போராளிகளால் ஏலனிக்கப் பட்டோம் !அப்போதும் எம் நேற்றைய வலிமை வெறும் வரலாறாகி கிதாபுகளில் சுவையான 'கிதால்களாக 'வடிக்கப் பட்டிருந்தன !

                                  தனித் தேசியம் எனும் காலனிச் சுரண்டிகள் வைத்த அடிமை பொறிக்குள் உரிமை எனும் 'டென்ட் 'அடித்து ஜனநாயக சாம்பாருக்காய் வெங்காயம் உரிக்கும் வெளங்கா அரசியலில் கண்டபலன் ஒன்றுமில்லை !உம்மத்தின் பெயர் சொல்லி பல பொலிடிகல் கிங் ஜோக்கர்கள் உருவானதை தவிர !

       வரித்துணி வில்லங்கம் காவித் துணியிடம் இன்று கைமாற்றப் பட்டுள்ளது தவிர என்ன நடந்தது !? கசாப்புக் கடை டெண்டர் கைமாறியது போல அனைத்தும் நிகழ்ந்துள்ளன.அறுப்புப் பிராணிகளாக முஸ்லீம்கள் என்ற நிலை மட்டும் மாறவில்லை .ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது எமது விதி அல்ல ! எமது நிஜத்தை உணராதவரை துரத்தும் துயரமான குப்பாரின் சதி !

         எமது மீட்சியும் விடுதலையும் இஸ்லாம் எனும் சத்திய அதிகாரத்தின் அறைகூவலில் மட்டுமே !முஹம்மத் பின் காசிமோ ,தாரிக் பின் சியாதோ இனி வரப்போவதில்லை ! ஏனென்றால் நாங்கள் தாம் அவர்கள் என்பதை 'வஹ்னை 'புதைத்து விட்டு நாம் உணராத வரை தொடரத்தான் போகிறது  ! 'குப்பாரின் 'கொண்டாட்டம் அதுவரைதான்.

     அந்த இலட்சியத் தலைமையும் அதன் தெளிவான கட்டளையும் அதை அட்சரம் பிசகாமல் பின்பற்றும் ஒற்றுமையும் தவிர தாகூதிய
சத்துருக்கள் அஞ்சப்போவதில்லை .அந்த வரலாறு எம்மால் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.இது வஹியின் வாக்குறுதி இங்கு எமது தீர்க்கமான முயற்சியே காலத்தின் தேவை .

                                               கிலாபா அர்ராஷிதா என்றால் என்னவென்று எம்மைவிட தாகூத்களுக்கு நன்கு புரியும். அது அசத்திய சம்ஹாரதுக்கான மூலவேர் .பாவம் ஞான சாரர் இப்போது சற்று துள்ளட்டும் .பொதிசுமக்க முடியும் என்பதை நன்றாகவே நிரூபிக்கிறார் .



No comments:

Post a Comment