Thursday, March 27, 2014

தேர்தல் திருவிழாவும் தேர் இழுக்கும் முஸ்லீம்களும் !!

 
   நேற்றுவரை குன்றும் குழியுமாக இருந்த வீதிகளுக்கு திடீரென கற்கள் கொட்டப் படுகின்றது !செப்பனிட போகிறார்களாம் . ஆளும் அதிகாரத்தின் பாசப்பார்வையில் பக்காவான சுயநலம் .இது தேர்தல் காலம் அல்லவா ! வாக்கு வேட்டைக்காகாக நடத்தும் நாடக அரசியல் அது .


   மக்களுக்காக அதிகாரமா அதிகாரத்துக்காக மக்களா? இந்தக் கேள்வியை புரிந்த நிலையிலேயே இன்றைய அரசியல் நோக்கப்பட வேண்டும் . சுய தேவைக்காக சேவை என்றால் அது வியாபாரம் . உரிமைகளை எதோ சலுகை போல் காட்டி நூற்றுக்கு தொண்ணூறை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் களவாணித் தனமே இன்றைய அரசியல் .


   சந்தர்ப்பதிட்கு சேறு பூசிவிட்டு குட்டிக்கரணங்கள் அடித்து கட்சி மாறி சாக்கடையை சந்தனமாக்கி பேசும் (அ)யோக்கிய தலைவர்களை நம்பி அடிமாடாய் உழைக்கும் முஸ்லீம் உம்மத்தின் உதிரங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் அது பட்ட மரத்தில் ஏறி பழம் பறிக்க முடியாது எனும் உண்மையே ஆகும் . சந்தனமாக இஸ்லாம் இருக்க சாக்கடையை நம்பிய வாழ்வு எதற்கு !? குப்ரை நம்பினால் உனக்கு இம்மையும் ஏமாற்றமே ,மறுமையும் ஏமாற்றமே .


நிர்வாண நியாயங்களில் மஸ்ஜிதில் தேசியக் கொடியும்
பறக்க விட்டோம்!! அவமானங்கள்
சாணாக்கியமாக மொழி பெயர்க்கப் பட
கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஆமா சாமிகளாகி !
அல்லாஹ்வை 'ரிஸவ்வில்' ஒழித்தும்
வைத்தோம்! கொல்லப் படுவோம் என்பதட்காக
எம் உயிரினும் மேலான அகீதாவை
தேசியப் படுகுழியில் போட்டு எம் இமாம்கள்
இரகசியமாக இகாமத் சொல்லச் சொன்னார்கள்!
குனூத் ஓதி குப்ரை வெற்றி கொள்வோம்!
என்ற ஆச்சரியமான 'தவக்குலில் ' !!
இப்போது புதிய வார்ப்பாக பிசாசை வெற்றி கொள்ள
பேயோடு கூட்டுச் சேர சொல்கிறார்கள்!!
குப்ரிய 'வைரஸ்' சிதறும் இந்த வார்த்தைகளில்
எம் கொள்கை கொலைகாரன் சிறுபான்மை
வாழ்வென்ற வாளோடு எம்மீது பாய்கிறான்!
கழுத்தைக் கொடுப்பாதா எம் முடிவு !??

No comments:

Post a Comment