அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் ) மக்கள் அனைவரும் நன்மையையை பற்றியே அதிகமாக வினவினர் .நான் தீமை என்னை மிகைத்து விடாமல் இருக்க தீமையை பற்றியே அதிகம் வினவக்கூடியவனாக இருந்தேன் ...............(ஹுதை பதுள் யமானி (ரலி ) ,முஸ்லிம் )
என்பது ஒரு நீண்ட எதிர்கால முன்னறிவிப்பு தொடர்பான நபிமொழி ஒன்றின்
ஆரம்ப வாசகங்களாகும் , இங்கு நான் கருத்தாட வருவது அந்த நபிமொழி பற்றிய விளக்கத்தை அல்ல ; மாறாக இந்த சஹாபியின் வித்தியாசமான
அணுகுமுறையில் அளப்பரிய எதிர்கால தெளிவுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
விட்டுச்சென்றுள்ளார்கள்; என்பதினூடாக எதிர்நிளையினூடான பார்வையின் அவசியத்தை நாம் உணர்ந்து
கொள்ள வேண்டும் என்பதே .
எல்லோரும் ஒரு விடயத்தின் நன்மையின் தேடல் என்பதிலிருந்துதான்
எதையுமே தொடங்குவர் . அந்த எதிபார்ப்பும் பார்வையும் கசப்பான
எதிர்விளைவுகள்
சந்திக்கப்படும் போது தற்காப்பு நிலையெடுக்கும் சூழ்நிலையையும் மீறி
அந்த தீமையால்
விழுங்ககப்பட்டு விடுகிறோம் . கடந்த காலத்தின் படிப்பினைகளில்
இருந்து நிகழ் காலத்தின் சூழ்நிலையை அலசாமல் வரலாற்றின் மீது எமது ஆதாரங்களை தேடுவது
சில நேரம் உறங்கு நிலையில் இருக்கும் வைரஸ் ஒன்றை உயிர்பிப்பதாகவும்
ஆகிவிடும் . இன்றைய நிலையில் இஸ்லாமிய தவ்வா , நிலைப்பாடுகள் , காலத்தின் தேவை என்ற ஒருபக்க பார்வைகள்
இவை எல்லாவற்றிலும் வஹி வழிகாட்டலும் ,ரசூல் (ஸல் ) அவர்களின் சீராவும் , சஹாபாக்கள் ,தாபியீன்கள் ,தபஹ்தாபிஈன்கள் , இமாம்கள் என இன்றுவரை தொடரும் வரலாறும் அதன்
பயன்பாடும் தொடர்பில் எமது பார்வை சற்று மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே
எனது கருத்தாகும் .
(நபியே !) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக , (அந்த ஹுதைபியா உடன்படிக்கை எனும் வெற்றியை
)உமக்கு அளித்தோம்
(சூராஹ் அல் பத்ஹ் : வசனம் 01)
ஹுதைபியா உடன்படிக்கை தொடர்பாக அல்லாஹ் (சுப) இந்த வசனத்தை அருளினான்
. இந்த ஒப்பந்தம் தொடர்பில் உமர் (ரலி ) உட்பட பல சஹாபாக்கள் கோபத்துடனும் ,கவலையுடனும் இருந்த நிலையில் இந்த வசனம்
அருளப்பட்டது . அல்லாஹ்வின் தூதர் (ஸல் )ஒருவரை உமரிடம் அனுப்பி இந்த வசனத்தை ஓதிக்காட்ட பணித்தார்கள் .
அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்த உமர் (ரலி ) "அல்லாஹ்வின் தூதரே இது வெற்றியான விடயமா ? என்று கேட்டார்கள் ;அதற்கு நபி (ஸல் ) ஆம் என்றவுடன் "
மன நிறைவோடு திரும்பிச்சென்றார்கள் . இங்கு எமக்கு எழும் கேள்வி அந்த
தெளிவான வெற்றி எது என்பதே .
ரசூல் (ஸல் ) அவர்களின் ஸீரா தொடர்பில் எமது ஆய்வு மிகவும் ஆழமாகவும் நிதானமாகவும்
அவதானிக்கப்பட வேண்டும் .அண்ணாரது வாழ்க்கையில் இரண்டு பிரதான பக்கங்கள்
புரியப்படாவிடத்து இன்று நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கும் , நிர்ப்பந்தங்களுக்கும் , செயற்பாடுகளுக்கும் தவறான ஆதாரமாக
சிலவற்றை கருதிவிட முடியும் .
காலா காலமாக அநேகமான எமது முஸ்லீம் உம்மாவின்
இஸ்லாம் பற்றிய புரிதல்கள் வெறும் மத வியாக்கியானம் கொண்ட ஆன்மீக
பார்வையிலேயே ஆதாரப்படுத்தியுள்ளது . அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கொண்டு வந்த செய்தி முழு
மனிதர்களுக்குமானது என்றவகையில் அதை ஏற்றோர் ,ஏற்காதோர் ,எதிர்ப்போர் தொடர்பில் தொடர்பில்
இஸ்லாத்தின் பாணியிலேயே அதற்கான விளக்கங்களை தெளிவு பெறா விடத்து இஸ்லாத்தின்
இயங்கியலை முஸ்லீம்களாகிய
நாமே கேவலப்படுத்தி விடுவோம் .
ஹுதைபியா ஒப்பந்தத்தில் அல்லாஹ்வின்
தூதர் (ஸல் )
அலி (ரலி ) யை அழைத்து வாசகங்களை கூற அலி (ரலி ) எழுத
ஆரம்பித்தார்கள் . தொடக்கமே குழப்பமானது "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
" என ரசூல் (ஸல் )
கூற குறைசித்தரப்பான "சுஹைல் இப்னு அமர் " அதை மறுத்து
"அல்லாஹ்வின் மீது
சத்தியமாக ! ரஹ்மான் என்றால் யார் ? என்று எங்களுக்கு தெரியாது . எனவே "பிஸ்மிகல்லாஹும்மா " என்று எழுதும்படி
கூறினார் .அதை ஏற்று நபியவர்களும் (ஸல் )
அலி (ரலி ) இடம் அவ்வாறே எழுதச்சொன்னார்கள் .பின்பு "இது
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் செய்யும் சமாதான உடன்படிக்கையாகும் " என
எழுதும்படி பணிக்கவும் மீண்டும் அமர் இப்னு சுஹைல் குறுக்கிட்டு நீர் அல்லாஹ்வின்
தூதர் என நாங்கள் ஏற்றிருந்தால் நாம் உம்மை அவனது வீட்டிலிருந்து தடுத்திருக்க
மாட்டோம் ,உம்முடன் போர் செய்திருக்க மாட்டோம் ! எனவே முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று எழுதும்படி கூறினார் . அதற்கு நபி (ஸல் ) நீங்கள் என்னை பொய்யன் என்று கூறினாலும்
சரியே ; நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர்தான் என்று கூறிவிட்டு அலி (ரலி ) இடம்
" ரசூலுல்லாஹ் " எனும் பதத்தை அழித்து முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்று
எழுதப்பணிக்க அலி (ரலி ) அவ்வாறு எழுத மறுக்கவே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) தனது கையினால் அதனை அழிக்க
பின் சத்து ,சரத்துடன்
அந்த ஒப்பந்தம் எழுதிமுடிக்கப்பட்டது முஸ்லீம்களுக்கு மத்தியில்
சர்ச்சைக்குள்ளான இந்த விடயம் தொடர்பாகவே நான்
மேற்சொன்ன அல் குர் ஆன் வசனம்
அருளப்பட்டது .
நான் இங்கு குறிப்பிட வரும் விடயம்
என்னவென்றால் இந்த உடன்படிக்கை தொடர்பாக அல்லாஹ்வின் பண்புப்பெயர்களில் ஒன்றான"
ரஹ்மான் ' என்ற வாசகம் நீக்கப்பட்டது ,மற்றும்" ரசூலுல்லாஹ் " என்ற
வாசகம் நீக்கப்பட்டது தொடர்பில் இங்குள்ள விடயமே சுஹைல் இப்னு அம்ர் கூறியது போல்
அவர்களுக்கிடையே இருந்த பிரச்சினையே அதுதான் மக்காவில் இஸ்லாமிய அழைப்புப்
பணியின் தொடக்கப்புள்ளியே அந்த விடயம்தான் .இதை குறைசிகள்
ஏற்றுக்கொண்டிருந்தால் அவர்களுக்கிடையே போராட்டமே நிகழ்ந்திருக்காது . இப்படி
ஒரு ஒப்பந்தம் தேவையற்றதாகியிருக்கும் . ஆகவே இந்த வாசக நீக்கங்கள்
ஒரு விட்டுக்கொடுப்பிற்கான ஆதாரமா ? அப்படியானால் வஹி கூறும் அந்த தெளிவான
வெற்றி இஸ்லாத்தின் எதிரிகளோடு சந்தர்ப்ப சமரசமும் அதில் எமது
பலவீனத்திலும்
அவர்களை திருப்திப்படுத்த விட்டுக்கொடுக்கும் விடயங்களில்
இஸ்லாத்தின் எந்தப்பகுதியையும் ( அகீதா முதல் ஷரீயா வரை ) பயன்படுத்தலாம் எனும்
நிலைப்பாடு தானா ? இந்த கருத்தியல் பிறவிக்குருடன் வரையும் காலைக்காட்சிக்கு ஒப்பானது
.
ஆகவே அல் குர் ஆன் கூறும் அந்த வெற்றி எது என்பது
தொடர்பில் அந்த ஹிதைபியா விடயங்களை ஆழ்ந்து அவதானிப்பது கட்டாயமானது . இந்த ஹுதைபியா சம்பவம்
பற்றி ஆராயும் போது முதலில் தெளிவு பெற வேண்டியது . இஸ்லாத்தின் அன்றைய நிலை .
அல்ஹம்துலில்லாஹ் தனக்கென ஒரு கொள்கை நிலம், அரசியல் சிந்தாந்த தெளிவுள்ள மக்கள் கூட்டம் , தேவை ஏற்படின் எந்நிலையிலும்
களமாடக்கூடிய கட்டமைக்கப்பட்ட இராணுவ வலிமை இதுதான் அந்தக்காலப்பகுதியின் இஸ்லாத்தின்
(மதீனாவின் ) நிலை .
உண்மையில் ரசூல் (ஸல் ) அவர்களின் மதீனா வாழ்வு என்பது இரண்டு
முக்கிய
செயட்கட்டங்களை கொண்டது . மதீனாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) ஒரு
நபியாக
மட்டும் இருக்கவில்லை . மாறாக இஸ்லாத்தின் ஆட்சித்தலைவராகவும்
இருந்தார் . இங்கு ரசூல் (ஸல் ) அவர்களின் நபித்துவத்தை , அவர் சொன்ன மார்க்கத்தை
குறைசிகள்
ஏற்கா விட்டாலும் அவரது
அதிகாரம் பொருந்திய நிலைக்கான அங்கீகாரமாக
குறைசித்தரப்புதான் ஒப்பந்தம் நோக்கி வருகின்றது .
சூழ்நிலையை அவதானியுங்கள் வெறும் உம்ராவிட்கான
பயணத்தயாரிப்போடு மட்டும் ஹுதைபியா வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல் )
செல்லவில்லை .* தமது பயணத்தின் போது சாதாரணமாக அரபிகள் அணிந்து செல்லும்
ஆயுதங்களைவிட மேலதிக ஆயுதங்கள் இரகசியமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது .
* மக்காவில் இருக்கும் பல்வேறு
கோத்திரங்களை சமாளிக்கும் தந்திரங்களையும் செய்தார்கள் ( உதாரணம் அடையாளமிடப்பட்ட
அறுப்புப் பிராணிகள் வரிசைப்படுத்தி காட்டப்பட்டமை) ,* மதீனாவில் இருந்தே குறைசிகள்
அங்கீகரிக்கும் ஒரு பொதுவான
தூதுவரை உம்ராவிற்கு தாம் வரப்போகும் செய்தியை அழகாக சொல்லி
குறைசிகளின்
கருத்தை அறிந்ததிருக்கலாம் .; ஆனால் அவ்வாறு செய்யாமல் ஹுதைபியா வரை
வந்து உஸ்மான் (ரலி ) அனுப்பப்படுகிறார் . * மேலும் உஸ்மான் (ரலி )
திரும்பிவருவது
தாமனதும் அவர் கொல்லப்பட்டிருப்பார் எனும் அடிப்படையில் மக்காவினுள்
நுழைந்து கொல்லப்படும் வரை போராடுவது எனும் பழிவாங்கும் தாக்குதல் யுத்தத்திற்கு (பையதுர்ரில்வான்
)சஹாபாக்களிடம் வாக்குறுதி வாங்கியது.*காலித் இப்னு வலீத் (ரலி ), இக்ரிமா (ரலி ) (அந்நிலையில் அவர்கள்
எதிர்த்தரப்பின் முன்னணி தளபதிகளாய் இருந்தார்கள் ) போன்றோரின் தாக்குதல்
மனோநிலையை தவிர்த்து தற்காப்பு மனோநிலைக்கு செல்லத்தக்க உளவியல் யுத்த தந்திரங்களை
மேற்கொண்டது (யுத்த காலத் தொழுகை அமுல் நடாத்தப்பட்டது ).
* ஒப்பந்தம் எழுதப்பட்டு திரும்பிய அடுத்தகட்டம்
குறைசிகள் மீது இன்னொரு அதிர்ச்சி வைத்தியம் அது யாரெல்லாம் ஹுதைபியாவில் கலந்து
கொண்டார்களோ அவர்கள்
எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டளையோடு கூடிய கைபர் கோட்டை
(யூதக்குள்ள நரிகளுக்கெதிரான) முற்றுகை.
(இவர்கள் குறைசிகளோடு இரகசிய உறவாடி
முஸ்லீம்களை கருவறுக்க காத்திருந்தவர்கள் ).* தெளிவான ஆதாரங்களின்
படி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் இந்த ஒப்பந்தத்தின் பின் தான் மதீனா
எல்லைகளுக்கு அப்பால் உள்ள கவர்னர்களுக்கும் ,அரசர்களுக்கும் இஸ்லாத்தை (ஏற்றுக்கொள் , அல்லது கட்டுப்படு ,அல்லது சண்டையிடு ) பற்றிய
வெளிநாட்டுக்கொள்கை பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்டது . (புகாரி ,பதுஹுள் பாரி )
எனவே இந்த ஹுதைபியா ஒப்பந்தம் ஒரு தோல்விநிலை
ஒப்பந்தமல்ல மாறாக ஒரு தெளிவான அரசியல் , இராணுவ நிர்ணயம் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை . ஒரு தெளிவான அழுத்தத்தின் மூலம் குறைசிகள்
இஸ்லாத்தின்
வெளிநாட்டுக்கொள்கை மீது இழுத்துவரப்பட்டிருக்கின்றார்கள் . வஹிசொன்ன அந்த
தெளிவான வெற்றி இதுதான் என்று இப்போது புரிகின்றதா . எனவே நாம் இந்த
ஹுதைபியாவை அதாரப்படுத்தும்போது குப்ரிடம் இஸ்லாத்தை அடகு வைக்கும் தவறை செய்யாமல்
அல்லாஹ் (சுப) எம்மை பாதுகாக்க வேண்டும் .
No comments:
Post a Comment